14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம், கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி நேற்று தான் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. சர்கார் பட கதை கருவும், உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனின செங்கோல் கதை கருவும் ஒன்றாக இருப்பதால் வருணின் பெயரையும் டைட்டீலில் போட்டு நன்றி தெரிவிக்க முருகதாஸ் கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த விசயத்தில் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எழுத்தாளர் சங்கத் தலைவரான கே.பாக்யராஜ். இதனால் பாக்யராஜ் மற்றும் அவரது மகன் சாந்தனு மீது விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இதை பத்திரிகையாளர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் பாக்யராஜ்.
மேலும் விஜய் ரசிகரான சாந்தனு, இந்த சம்பவத்திற்கு பிறகு அவரின் ரசிகராக இருக்க மாட்டார் என கூறப்பட்டது. இதுப்பற்றி சாந்தனு டுவிட்டரில் கூறியிருப்பதாவது : சூழ்நிலைக்கேற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா எனக்கு விஜய் அண்ணா தான். சர்கார் கதையை எனது தந்தை வெளிப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம், சர்காரை கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.