ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் கதை திருட்டில் சிக்கி கோர்ட் வரை சென்று, பின்னர் சுமூகமாகி முடிவுக்கு வந்திருக்கிறது. வழக்கை தொடர்ந்த செங்கோல் பட கதையின் உரிமையாளர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு அங்கீகாரம் கொடுக்க முருகதாஸ் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் வருணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடினார் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ். கோர்ட்டில் வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
சர்கார் கதை விவகாரத்தில் முடிந்தவரை வெளியே பிரச்னை தெரியாமல் சுமூகமாக பேசி தீர்க்க முயற்சித்தேன். என்னை தவறாக பேசி விடுவார்கள் நான் கதையை உருவாக்கினேன் என்றார். ஒரு கதைக்கரு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் வருண் பதிவு செய்துள்ளார். அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என முருகதாஸிடம் வலியுறுத்தினேன். சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை மறுத்த முருகதாஸ் இப்போது கோர்ட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார். பிரச்னை சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.
அதேசமயம் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். நான் ஏதோ விஜய் படத்திற்கு தடை ஏற்படுத்துவது போன்று என்னையும், எனது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் மிகவும் விமர்சித்தார்கள். என் மகனும் விஜய்யின் ரசிகன் தான், விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அதேப்போல் வருணை விட முருகதாஸை எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கையில் எதற்காக வருண் பக்கம் நிற்க வேண்டும். நான் ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கதையை வெளியில் சொன்னேன்.
இதுதொடர்பாக விஜய்யிடம் பேசினேன். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். எனது படம் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லவில்லை, உங்கள் மனதிற்கு எது நியாயமோ அதை செய்யுங்கள் என்றார். விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.