விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
சென்னை : சின்ன சின்ன பிரச்சினைகளுக்குகூட படப்பிடிப்பை நிறுத்துவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். நேற்றும் அப்படி ஒரு பிரச்சினை நடந்தது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திராவின் ஸ்டூடியோவில் ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கான சாதனங்களை அவுட்டோர் யூனிட்டை சேர்ந்தவர்கள் தனியார் வாடகை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதற்கு படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றிச் செல்லும் பெட்போர்ட் யூனியனை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று வாதம் செய்தனர். இருதரப்பினருக்குமான மோதல் மற்ற படப்பிடிப்பு தளங்களுக்கும் பரவ அத்தனை படப்பிடிப்பையும் தொழிலாளர்கள் நிறுத்தினார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடித்த அயோக்யா, காஞ்சனா 3, குருதி ஆட்டம் உள்பட சென்னையில் நடந்த சுமார் 20 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் தயாரிப்பாளர்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டதாக தெரிகிறது.
"பேசி தீர்க்க வேண்டிய சின்ன சின்ன பிரச்சினைகளுக்குகூட படப்பிடிப்பை நிறுத்துவதால் நஷ்டம் அடைவது தயாரிப்பாளர்கள்தான். ஆனால் வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும் தொழிலாளர்கள் அவர்கள் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்" என்றார் நேற்று பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஒருவர்.