நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்றார்.