ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா என இளம் நடிகர் பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அழைத்து வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி பாராட்டு பெற்ற கம்மட்டிப்பாடம் படத்தில் கவனித்தக்க அறிமுகமாக உள்ளே நுழைந்தவர் தான் இந்த மணிகண்ட ஆச்சாரி.
தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிகண்ட ஆச்சாரி, வெள்ள பாதிப்பின்போது கேரளாவிற்கு உதவி செய்த விஜய்சேதுபதிக்கு கேரளா மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.