ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திப்படத்தில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தியை நடிகை இலியானா மறுத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்பவர் இலியானா. தமிழில் விஜய் ஜோடியாக் நண்பன் படத்தில் நடித்துள்ளார். தற்போது பார்ஃபி எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதனை இலியானா மறுத்துள்ளார். அவர் அளித்தள்ள பேட்டியில், ப்ரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். ப்ரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ப்ரியங்கா சிறந்த நடிகை, என்று கூறியுள்ளார்.