ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேரளாவில் கொட்டிதீர்த்து வரும் கனமழையால் 300 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சிக்கி உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அங்கு விரைந்துள்ள சமூக ஆர்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வருகிறார்கள்.
அதோடு, ஏராளமானோர் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவைசேர்ந்தவரான நடிகை அமலாபாலும் களமிறங்கி நிவாரண உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின்போது அவரது கையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனபோதும் அதை பொருட்படுத்தாமல் அவர் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.