ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ஜோக்கர்' குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா, நடித்துள்ள 'ஓடு ராஜா ஓடு' படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனம் உடனடியாய் அடுத்தப்படத்தை தயாரிக்கிறது. அந்தப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல ஹிந்திப்பட இயக்குனர் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
விக்ரம் வேதா படத்துக்குப் பிறகு மாதவன் தற்போது தமிழில் நடித்து வரும் ஒரே படம் 'மாரா'. அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
இதற்கு முன்னதாக சற்குணம் இயக்கத்தில் ஒரு படத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துவிட்டநிலையில் அந்தப்படம் குறித்த புதிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான் ஓடு ராஜா ஓடு படத்தயாரிப்பாளரின் அடுத்தபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாதவன்.