ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் கவர்ச்சி உடை அணிந்து வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நடிகைள் யாஷிகா, ஐஸ்வர்யாவின் உடைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் பொன்னம்பலம் நிகழ்ச்சியை நடத்தும் கமலிடம் புகார் கூறினார். அதற்கு பதில் அளித்து அந்த நிகழ்ச்சியிலேயே கமல் கூறியதாவது:
நீங்கள் ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்கிறீர்கள். ஒரு விஷயம் இங்கு சொல்கிறேன். நூறு நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை ஜாக்கெட் அணியாத பெண்களே அதிகம் இருந்தார்கள். அதன்பிறகும் அது தொடர்ந்தது. அவர்கள் எனக்கு தெரிந்து நல்லவர்கள் தான். என் பாட்டி அவருடையை 28 வயதில் கணவரை இழந்தார். முடியை மழித்து முக்காடு போட்டுக்கொண்டு 95 வயதுக்கும் மேலாக அவர் வாழ்ந்தார். அவரை நான் பார்த்து இருக்கிறேன்.
அதே சமயம் கணவரை இழந்து வெளிஉலகுக்கு வந்த இந்திரா காந்தியையும் பார்த்து இருக்கிறேன். பாட்டியோ படிக்கிற பையனுக்கு எதிராக கூட போகமாட்டார். இந்திரா காந்தியோ ஐ.நா சபைக்கே போய் பேசிவிட்டு வந்தார்.
இதை எப்படி பார்ப்பீர்கள்? ஆடை என்பதற்கும் கலாசாரம் என்பதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியெல்லாம் சொன்னால் ஒரு பெண் என்னதான் செய்யமுடியும்? இங்கே இருக்கும் யாஷிகா எனக்கு சுருதியாகத்தான் தெரிகிறார். எனது இரண்டு மகள்களின் ஆடை விஷயத்தில் நான் எதுவும் சொல்வது இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது.
இவ்வாறு கமல் கூறினார்.