சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்' என இரண்டு படங்களை இயக்கினார் அட்லீ.
'மெர்சல்' படத்துக்கு நெகட்டிவ்வான டாக் இருந்ததால் படம் தோல்வியடையும் சூழல் ஏற்பட்டபோது திடீரென ஏற்பட்ட சர்ச்சையினால் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதனால் விஜய் - அட்லீ கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக மாறியது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அந்தப்படத்தை அட்லீ இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் விஜய் தரப்போ, ஏஜிஎஸ் தரப்போ இந்த செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.