மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக "மறக்க முடியுமா தூத்துக்குடியை" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விமர்சித்து பல முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்ற செயல். அங்கு நடந்தவற்றையும், நடந்து கொண்டிருப்பவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி பயமுறுத்துகிறவர்களின் முடிவும் மோசமாக இருக்கும்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் போன்று மாறி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது. மக்கள் இவர்களை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். என்னை போன்றவர்கள் கேள்வி கேட்பது மக்களுக்காக. கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால் கேள்வி கேட்டால் நம் கையை எடுத்தே நம் கண்ணை குத்துகிறார்கள். என்றார் பிரகாஷ்ராஜ்.
தமிழக அரசை விமர்சித்து பிரகாஷ்ராஜ் பேசியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்ததாக தனியார் அரங்க உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.