'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் |
நடிகர் லாரன்ஸ், டைரக்டர் ராசுமதுரவன் கூட்டணியில் அடுத்து உருவாகும் புதிய படத்திற்கு பரமன் என்று பெயரிட்டுள்ளனர். டைரக்டர் ராசு மதுரவன் மற்றும் நடன இயக்குநரும், நடிகருமான லாரன்ஸ் இணைந்து உருவாக்கிய பாண்டி படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது பரமன் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
இதுபற்றி ராசு மதுரவன் அளித்துள்ள பேட்டியில், தற்போது மைக்செட் பாண்டி என்ற படத்தை சபரிஷ் மற்றும் சுனைனாவை வைத்து இயக்கி வருகிறேன். இப்படத்தை முடித்த பிறகு லாரன்சுடன் இணைந்து பரமன் படத்தை இயக்க உள்ளேன். லாரன்சுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன், என்று கூறியுள்ளார். உணர்வு பூர்வமான குடும்பக் கதைகளை படமாக்கி வெற்றி பெற்றுவரும் ராசு மதுரவன், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அடுத்து 2025 என்ற பெயரில் முப்பரிமாண (3டி) படம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.