ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. பாலிவுட் நடிகர்களில் நடனத்துக்கு புகழ்பெற்றவர். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இவரது மகன் மஹாஅக்ஷ்ய். இவரும் இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகரான மஹா மீது இளம் போஜ்புரி நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
டில்லி தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அவர், மஹா மீது நேரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
என்னுடன் மஹா அக்ஷய் சில வருடங்களாக நெருங்கி பழகி வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். 4 வருடங்களாக என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். மருந்து கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.
மஹா அக்ஷய்யின் தாயார் யோகிதா பாலிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் என்மீது ஆத்திரப்பட்டார். மகனுடனான உறவை முறித்து விடும்படி மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்த மஹா அக்ஷய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மஹா அக்ஷய் மற்றும் அவரது தாயார் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




