ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் கிடைத்ததைப் போன்றதொரு வெற்றி தெலுங்கிலும் கிடைத்திருப்பதால் தயாரிப்பாளர், நடிகர் விஷால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். தமிழில் வெளியான 'இரும்புத்திரை' படம் சுமார் 40 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி, கடந்த வாரம் வெளியானது. அங்கு அதே தினத்தில் வெளியான நேரடித் தெலுங்குப் படங்களை விட 'அபிமன்யுடு' படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து முதல் நாளே 3.5 கோடி வசூலானதாகத் தகவல் வெளியானது. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினமாக இருந்ததால் அதே அளவிலான வசூல் இருந்திருக்கிறது. முதல் வார இறுதியில் 10 கோடி வசூலை 'அபிமன்யு' கடந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழி வசூலையும் சேர்த்து இப்போது 50 கோடி வசூலைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி சமந்தாவிற்கு ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர் நடித்து இந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'ரங்கஸ்தலம், மகாநதி, அபிமன்யுடு' ஆகிய மூன்று படங்களுமே நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. திருமணமான பின் ஒரு நாயகிக்கு இப்படி ஹாட்ரிக் வெற்றி கிடைப்பது இதுவே முதல் முறை.