‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் ராம்சரண், சமந்தா இணைந்து நடித்த ரங்கஸ்தலம் என்கிற படம் வெளியானது. சுகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் சூப்பர்ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பிலும் இடம் பிடித்தது. குறிப்பாக இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் காந்தி என்கிற கதாசிரியர், தான் எழுதிய உக்குப்பாடம் என்கிற கதையில் உள்ள முக்கியமான காட்சியை காப்பியடித்து ரங்கஸ்தலம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் இந்த குற்றசசாட்டை மறுத்துள்ள இயக்குனர் சுகுமார், தானோ, தனது பட தயாரிப்பாளார்களோ இதற்கு முன் சம்பந்தப்பட்ட காந்தி என்பவரை பார்த்ததே கிடையாது என்றும், அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 1979ல் வெளியான ரஜினி நடித்த தர்மயுத்தம் படத்தை பார்த்தபோது, அதில் தான் பழிதீர்க்க நினைக்கும் தன் கையால் தான் சாக வேண்டும் என்பதற்காக, அவனை விபத்தில் அடிபட்டு சாகவிடமால் ஹீரோவே காப்பாற்றி பின்னர் பழிதீர்க்கும் காட்சி என்னை ரொம்பவே கவர்ந்தது.. அதை தழுவித்தான் ரங்கஸ்தலம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்தேன் என கூறியுள்ளார் சுகுமார்.