ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், நலனுக்காக தான் போராடுகிறார்கள் .
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, இப்போதாவது உங்களது மவுனத்தை கலையுங்கள். போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று என பா.ஜ., சொல்கிறது, அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது. அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல. 2019-ல் கவனமாக இருங்கள்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
அரவிந்த்சாமி
"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டாக்காரர்கள் இறந்த செய்தி மிகவும் வருந்தத்தக்கது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என நடிகர் அரவிந்த்சாமி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.