பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! |
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விசி வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பொட்டு. பரத், இனியா, நமீதா, சிருஷ்டி டாங்ககே முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், மே 25-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் மீண்டும் தள்ளி போய் உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பட நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது... வரும் 25-ம் தேதி அதிக படங்கள் வெளியாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதிக பொருட்செலவில் பொட்டு படத்தை எடுத்துள்ளோம். குறைவான தியேட்டர்கள் கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதனால் பொட்டு பட வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். மறு தேதியை குறைந்த படங்கள் வெளியாகும் தேதியாக முடிவு செய்து தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.