விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவது சமீப காலத்தில் அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டில் சிறிய தயாரிப்பாளர்கள் அந்தப் படங்களை வெளியிட்டால் அதிக தியேட்டர்களைப் பிடிக்க முடிவதில்லை. அதனால், சில முன்னணி தயாரிப்பாளர்கள் மூலம் படங்களை வெளியிட்டால் அதிக தியேட்டர்களில் வெளியிட முடியும். தமிழ்ப் படங்களுக்கு விரோதமாக நடக்கும் இது போன்ற செயலை சில முன்னணி தயாரிப்பாளர்கள் செய்வது தமிழ் சினிமாவுக்கு எதிரானது என சிறிய தயாரிப்பாளர்கள் கொந்தளித்துப் போய் உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து இன்று வெளியாகும் டப்பிங் படமான 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா' படம் இன்று தமிழ்நாட்டில் சுமார் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், அதுவும் பெரிய தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. சில முக்கியமான தியேட்டர்காரர்கள் தெலுங்கு மக்களுக்குச் சொந்தமாக இருப்பதால் இது எளிதாகிறது என சிறிய தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்ப் படங்களை இவ்வளவு தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதிக்க ஆரம்பித்துள்ளது. அது போல டப்பிங் படங்களையும் மிகக் குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தால் தான் சிறிய தமிழ்ப் படங்கள் பிழைக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.