ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்குமான மொத்த செலவே 300 கோடி தான் என்று பேச்சு உண்டு. படத்தை பெரும்பாலும் அரங்கில், கிரின் மேட்டில் எடுத்ததால் அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தை எடுக்க முடிந்து என்ற தகவல் உண்டு. ஆனால், படத்தின் பட்ஜெட் என்ன என்பதை இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக 400 கோடி ரூபாய் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படம்தான் எடுக்கப்பட்டு வருகிறது.
ராஜமௌலி அடுத்து ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரை வைத்து எடுக்க உள்ளார். இப்படத்திற்கான கதை எழுதும் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். படத்திற்கான பட்ஜெட்டாக சுமார் 300 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளார்களாம்.
சரித்திரப் படத்தை எடுக்கவும், சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தை எடுக்கவும் 300 முதல் 400 கோடி ஆகும். அப்படியென்றால் ராஜமௌலி அடுத்து எடுக்கப் போகும் படம் என்ன மாதிரியான படம், அதற்கு ஏன் 300 கோடி ரூபாய் பட்ஜெட் என்று பலரும் யோசித்து வருகிறார்களாம்.
எவ்வளவு செலவு செய்தாலும் படத்திற்கு பூஜை போடும் அன்றே படத்தை வியாபாரம் செய்துவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.