ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரையில் சிரீயலில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, உதயநிதிஸ்டாலின் ஆகியோருடனும் தலா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இதுகுறித்து பிரியா கூறுகையில், எனது இந்த வளர்ச்சிக்கு காரணமே ரசிகர்கள் தான். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தபோது எனக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
சினிமா வாய்ப்பு வந்தபோது, விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் பெரிய நடிகராகி விட்டதால், நம்மாளும் முடியும் என்கிற ஒரு தைரியம் வந்தது. இப்போதைய ரசிகர்கள் சினிமா, சின்னத்திரை என்று பிரித்துப்பார்ப்பதில்லை. யார் நன்றாக நடித்தாலும் அவர்களை ரசிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில், நான் சினிமாவில் வேகமாக வளர்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம் என்கிறார் பிரியா பவானி சங்கர்.