14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தியேட்டர்களில் படத்தை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்களிடமே பணம் வசூல் செய்து வந்த கியூப் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. கட்டணத்தை குறைக்க கியூப் நிறுவனங்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த நிறுவனங்கள் இறங்கி வரவில்லை.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரச்சினையை தமிழக அரசும் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் படத்தை குறைந்த கட்டணத்தில் தியேட்டரில் திரையிட பல புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதுவரை 2 நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று 3வது நிறுவனமாக கே சேரா சோ என்ற நிறுவனம் தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்திருக்கிறது. இந்த நிறுவனம் வட இந்தியாவில் 1500 தியேட்டர்களில் படத்தை திரையிட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தியேட்டர்களில் இ சினிமா டிஜிட்டல் சேவை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மாஸ்டரிங் யூனிட்டாகவும் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் புதிய படங்களை தயாரிப்பாளர் சங்கமே மாஸ்டரிங் செய்து தியேட்டர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.