ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரிதா. தப்புத் தாளங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஜூலி கணபதி உள்பட பல படங்களில் நடித்தார். சாவித்ரிக்கு பிறகு சிறந்த நடிகையாக சரிதா போற்றப்பட்டார். கடைசியாக 2013ம் ஆண்டு அவர் சந்தோஷ் சிவன் இயக்கிய சிலோன் என்ற படத்தில் இலங்கை அகதியாக நடித்தார். தனது மகன்களுடன் துபாயில் செட்டிலாகிவிட்ட சரிதா அங்கேயே வாழ்ந்து வருகிறார். அடிக்கடி சென்னைக்கு வந்து தன் தங்கை விஜி சந்திரசேகரை சந்தித்துவிட்டுச் செல்வார்கள்.
தற்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல கன்னட இயக்குனர் சந்திரகலா இயக்கும் சில்லும் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இயக்குனர் சந்திரகலா சரிதாவுக்கு போனிலேயே கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மனோரஞ்சன் ஹீரோவாக நடிக்கிறார். சரிதாவுடன் சினிமாவை விட்டு விலகி இருந்த கன்னட நடிகர் ராகவேந்திர ராஜ்குமாரும் மீண்டும் நடிக்க வருகிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.