ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாண்டோ சின்னப்பா தேவர், ராம.நாராயணனுக்கு பிறகு தமிழில் விலங்குகளை மையமாக வைத்து படம் எடுப்பது மிகவும் குறைந்து விட்டது. நாய்கள் ஜாக்கிரதை, ஜூலியும் 4 நண்பர்களும் என அவ்வப்போது சில படங்கள் வந்தது.
அந்த வரிசையில் இப்போது முழுக்க முழுக்க ஒரு நாயை ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்கள். உறுமீன் படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
ஒரு நாய்க்கும், ஒரு மனிதருக்கும் இடையிலான உறவை மையமாக கொண்ட படம். ஒருவர் மீது மற்றவர் எப்படி அன்பு செலுத்துகிறார்கள், உதவுகிறார்கள் என்பது திரைக்கதை. கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இது தயாராகிறது.
ஒரிஜினில் நாய் நடிக்கிறது. என்றாலும் படத்தில் கிராபிக்ஸ் பணிகளும் இருக்கிறது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.