ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முன்னணி நடிகர்கள் படங்களைப் பற்றி எப்போதுமே பல்வேறு விதமான செய்திகள் பரவும். அதில் சில உண்மைகள் இருக்கும், பல பொய்கள் இருக்கும். இப்படித்தான் கடந்த வாரம் அஜித் நடிக்க உள்ள படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்ற செய்தி பரவியது.
நடிகை ஸ்ரீதேவி மறைவு பற்றி விஜய், அஜித் இருவருமே எந்த ஒரு இரங்கல் செய்தியும் சொல்லாமல் இருந்தனர். ஆனால், கடந்த வாரம் சென்னைக்கு வந்த போனி கபூர் மற்றும் அவரது மகள்களை அஜித், மனைவி ஷாலினியுடன் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பின்தான் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என செய்தி பரவியது.
சிலர் ஒரு படி மேலே போய், அஜித்திடம் ஸ்ரீதேவி முன்பு மனம் விட்டு அழுதார். ஸ்ரீதேவியின் அழுகையைத் தாங்க முடியாத அஜித், உடனே படம் நடித்துக் கொடுக்க சம்மதித்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். ஆனால், அஜித் தரப்பிலோ தற்போதைக்கு 'விசுவாசம்' படத்தில் நடிப்பதைத் தவிர வேறு எந்தப் படத்தில் நடிப்பது என்பது குறித்து அஜித் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனச் சொல்கிறார்கள்.
'விசுவாசம்' படம் வெளிவந்து வெற்றி பெற்றால் அதன்பின் அஜித்தின் சம்பளம் வேறு லெவலில் இருக்கும். இன்னமும் பலர் அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், 'விஸ்வாசம்' படம் முடிவடையும் சமயத்தில்தான் அடுத்த படம் பற்றி அஜித் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் என்கிறார்கள். அதுவரை அஜித்தின் அடுத்த படம் பற்றி வரும் தகவல்கள் உறுதியாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.