ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சய்க்கும் இருதினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களை மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து புதுமண தம்பதியர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது பேசிய கீர்த்தனா, நானும் அக்சயும் சென்னை லயோலா கல்லூரியில் ஒன்றாக விஸ்காம் படித்தோம். இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நான் மணிசாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அக்சய் பீட்சா படத்தை ஹிந்தியில் எடுத்தார். என்னை விட ரொம்ப புத்திசாலி அக்ஷய்.
எங்கள் திருமணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது நான் சில கதைகள் தயார் செய்து வருகிறேன். அக்சய்யும் கதை எழுதி வருகிறார், என்றவரிடம், புஷ்கர் காயத்ரி போல் இரண்டு பேரும் சேர்ந்து படம் இயக்குவீர்களா என்றால், நான் அவருக்கு படங்களில் உதவி செய்வேன், மற்றபடி சேர்ந்து படம் இயக்குவது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை என்கிறார். மணிரத்னம் எப்போது அழைத்தாலும் உதவி இயக்குநராக வேலை செய்வேன்.