கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் | பன் பட்டர் ஜாமுக்காக ராஜு ஜெயமோகனை பாராட்டிய விஜய் | ஒடிசாவின் பாரம்பரிய நடனத்தை கற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா | வேறு நடிகர்களே தெலுங்கில் இல்லையா? : காட்டி பட இயக்குனரிடம் விக்ரம் பிரபு கேட்ட கேள்வி | மோகன்லாலுடன் வாக்குவாதம் செய்தேனா? : குணச்சித்திர நடிகர் விளக்கம் |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ரக்ஷ்ன். விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியின், அது இது எது நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளராக வந்த ரக்ஷ்ன் சிரிச்சா போச்சு பகுதியில் பல காமெடி போர்ஷன்களில் நடித்தார். தற்போது கலக்கப்போவது யாரு சீசனில் தொகுப்பாளராக உள்ளார்.
சின்னத்திரை பணிகளுக்கு நடுவே சினிமா வாய்ப்பும் தேடிக் கொண்டிருந்தார். அது இப்போது கிடைத்திருக்கிறது. துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவரது நண்பராகவும், காமெடியனாகவும் நடித்திருக்கிறார். இதுபற்றி ரக்ஷன் கூறியதாவது:
நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும்.
மிக பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார்.