ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு திரைப்படத்திற்கான விழா என்றால் அதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுக்கு தனி கார் வசதியை படத்தின் தயாரிப்பாளர் செய்து கொடுப்பார். இப்போதெல்லாம் அந்த ஒரு சில மணி நேர நிகழ்ச்சிகளுக்குக் கூட சில நடிகர், நடிகைகள் 'கேரவன்' வேண்டுமென தயாரிப்பாளர்களைக் கேட்கிறார்கள். சமீப காலமாக இப்படி நடந்த சில விழாக்களும் உண்டு.
ஆனால், விழாவுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும் என்பதற்காக பைக்கில் வந்த நடிகையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதிசயம், ஆனால் உண்மை. ஐதராபாத்தில் நேற்று 'கரு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'கனம்' படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயம் கடுமையான டிராபிக்கும் இருந்திருக்கிறது. அதனால், காரில் வந்தால் தாமதமாக வர வேண்டியது இருக்கும் என நினைத்த படத்தின் நாயகி சாய்பல்லவி, உதவியாளர் ஒருவரின் பைக்கில் ஏறி விழாவிற்கு வந்திருக்கிறார். அவர் பைக்கில் வந்து இறங்கியதைப் பார்த்த படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
தான் நடிக்கும் ஒரு படத்தின் விழாவுக்கு எப்படியாவது வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்த சாய்பல்லவியை அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகன் நாக சௌரியா வேண்டுமென்றே விழாவுக்கு வராமல் தவிர்த்தது தனிக் கதை.