ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உண்மையான ரசிகர்கள் பலர் இருந்தாலும், யாருமே இயக்குனர் ராம் கோபால் வர்மாவை மிஞ்ச முடியாது. ஸ்ரீதேவி மறைந்த அந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து அவரைப் பற்றி டுவீட்டுகளைப் பதிவிட்டார் ராம் கோபால் வர்மா. அது மட்டுமல்ல இரண்டு கடிதங்களை உணர்வு பூர்வமாக எழுதி, ஸ்ரீதேவி மேல் அவருக்கிருந்த அபிமானத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.
கடந்த இரண்டு நாட்களாகவே ஸ்ரீதேவியின் சுயசரிதையை ராம்கோபால் வர்மா திரைப்படமாக எடுக்கப் போகிறார் என சில தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை மறுத்து மீண்டும் ஸ்ரீதேவி பற்றி ஒரு அழுத்தமான பதிவை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
அதில், “ஸ்ரீதேவியின் சுயசரிதையை நான் படமாக உருவாக்கப் போகிறேன் என சில மீடியாக்கள் சொல்வதில் உண்மை இல்லை. அது முட்டாள்தனமானது என நான் நினைக்கிறேன். மேலும், ஸ்ரீதேவி போல் நடிக்க இங்கு யாருக்குமே தகுதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா மனதில் ஸ்ரீதேவி எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.