ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை துவங்கிய கமல், மதுரைக்கு செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கு பார்த்த பிறகு தான் தெரிகிறது, இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக தான் பார்த்தீர்கள். இனி நான் நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.
இப்போது இந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என நினைக்கிறேன். இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை கூட்டத்திலும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல் பேசினார்.