ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சரத்குமார் தற்போது நடிக்கும் படம் பாம்பன். எஸ்.எஸ்.கே புரொடக்ஷ்ன் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். எம்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜனின் நாவலை மையமாக கொண்டு உருவாகிறது.
இது பிரமாண்டமாக தயாராகும் பேண்டசி படம். நீயா படத்தில் வரும் பழிவாங்கும் பாம்பு போன்று இதுவும் பழிவாங்கும் பாம்பு கதை. பழிவாங்கும் பாம்பனாக சரத்குமார் நடிக்கிறார். இவர் தவிர ஒரு புதுமுகம் நடிக்கிறார். அந்த புதுமுகத்திற்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார். இதில் வரலட்சுமிக்கு மிக முக்கியமான கேரக்டர். அவருக்கு நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் இருக்கிறது. படப்பிடிப்புகள் வருகிற 23ந் தேதி முதல் கும்கோணத்தில் தொடங்குகிறது.