ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வாரம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார் தமன்னா. அப்போது, அவரது ரசிகர் ஒருவர் அவர் மீது ஷூவை கழற்றி எறிந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் தமன்னா. அதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, சமீபகாலமாக தமன்னா சரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தற்போது அதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு தமன்னா பேட்டி அளித்துள்ளார். அதில், பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது மலர் கொத்துதான் தருவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஷூவை கொடுத்து வரவேற்றுள்ளார் என்று கூறிய தமன்னா, இந்த சம்பவம் அந்த ஸ்பாட்டில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், பின்னர் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.