ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி நடித்த படம் ஹர ஹர மகாதேவகி. அடல்ட் கதையில் உருவான இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது மீண்டும் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். ஆனால் முந்தைய படத்தில் நடித்த நிக்கி கல்ராணிக்குப் பதிலாக வைபவி சாண்டில்யா இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படமும் அடல்ட் கதையில் தான் தயாராகி வருகிறது.
இந்த படத்தை இயக்கும் சந்தோஷ் ஜெயக்குமார் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தையும் சேர்த்து இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு, ஒருநாள் திடீரென்று ஆர்யாவை இருட்டு அறையில் முரட்டு குத்து படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சென்ற அவர், ஒரு பாடலில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடனமாட வைத்து விட்டாராம்.
இந்த தகவலை கஜினிகாந்த் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூறிய ஆர்யா, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நான் ஒரு பாடலில் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. என்னைப்போலவே டைரக்டர் சந்தோசுக்கும் அந்த எண்ணமே இல்லை. திடீரென்று எடுத்த முடிவுதான் இது. அந்த வகையில், கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடனமாடியது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது என்கிறார் ஆர்யா.