மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் ஆங்கில டி.வி.சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
நான் அமைதியாகத்தான் இருந்தேன். நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருந்தேன். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடினார்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை. அந்த கொலை பற்றி நாட்டின் பிரதமர் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கொலைகளை ஆதரிப்பவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்கிறார்கள். மற்ற மதத்தினரை புண்படும்படி பேசுகிறவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். மோடியும், அமித்ஷாவும்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.
பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான். எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. 30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். அதுவாவது இவர்களுக்கு தெரியுமா? என்றார் பிரகாஷ்ராஜ்.