ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்சினிமா நடிகர்களில் பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் சத்யராஜ். அவரே பின்னர் தன்னுடைய கொள்கைக்கு மாறாக ஜாக்சன் துரை என்ற படத்தில் பேய்ப்படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமே பேய்தான்.
இந்நிலையில் தற்போது மற்றொரு பேய்ப்படத்தில் நடிக்கிறார் சத்யராஜ். மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த வடிவேல் என்பவர் 'கள்ளப்படம்' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் தன்னுடைய பெயரை வேல் என்று மாற்றிக் கொண்டு சூப்பர் நேச்சுரல் கதையம்சம் கொண்ட படத்தை அடுத்து இயக்குகிறார். எப்.எம். ரேடியோ ஸ்டேஷன் பின்னணியில் நடக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
பேய்ப்படமாக உருவாகவிருக்கும் இந்த படம் குறித்து இயக்குநர் வேல், ''ஒரு படத்துக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது பாதி வேலை முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு சத்யராஜ் சாரை விட பொருத்தமான நடிகர் வேறு யாரும் இல்லை! ஒரு ரேடியோ ஸ்டேஷனில் இரவில் நடக்கும் அசாதரண சம்பவங்களே இந்த படத்தின் மைய கரு. கதை தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு நிஜ எப்.எம்.ஸ்டேஷனிலேயே இப்படத்தை படமாக்க இருக்கிறோம்.” என்கிறார்.
நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பகுத்தறிவு பேசுகிறவர் பேய்ப் படத்தில் நடிப்பது சரியா? மக்கள்தான் சொல்ல வேண்டும்?