ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடித்த படம் நாடோடிகள். வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
'நாடோடிகள்-2' படத்தை சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' பட நிறுவனம் மற்றும் 'இன்ஸ்பைர் என்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 'நாடோடிகள்-2' படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் இன்னொரு நாயகனாக நடிக்க ஜெய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் கதை கூட கேட்க ஆர்வம் காட்டாமல் சமுத்திரக்கனியை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை நடிக்க வைக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார்.
நாடோடிகள் - 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிக்க அஞ்சலி தவிர இன்னொரு நாயகியாக, அதுல்யா நடிக்கிறார்.