ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வரும் பொங்கல் ரிலீசாக இதுவரை மூன்று படங்கள் வெளியாவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களுக்காக ஹீரோக்கள் இருவரும் முழு வீச்சில் புரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
சூர்யா, விக்ரம் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவர்களது ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் கேரளாவில் தங்கள் படத்தை புரமோட் பண்ணுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதனால் இருவருமே நேற்று ஒரே நாளில் கொச்சியில் முகாமிட்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்..
இருவருக்குமான ரசிகர்கள் வரவேற்பால் கொச்சியில் சில இடங்களில் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது. சூர்யா தனி ஒரு ஆளாக தனது படத்தை புரமோட் பண்ணிய சூழ்நிலையில், 'ஸ்கெட்ச்' படத்தின் புரமோஷனுக்காக விக்ரமுடன் கதாநாயகி தமன்னாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.