சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறிவிக்கப்படாத பஸ் ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் பாமர மக்களை அதிகமாக பாதித்துள்ளது. விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகமாகும் என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்ய வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.