ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகத்திலும் ஒவ்வொரு வருடமும் பல புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமான நாயகியாகவும், புகழ் அடையும் நாயகியாக வளர்கிறார்கள்.
நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்து முதலில் வெளிவந்த படம் 'இது என்ன மாயம்'. ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் 'ரஜினி முருகன்'. முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே 'பாம்பு சட்டை, தொடரி' ஆகிய படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷை வெற்றிகரமான நாயகியாக மாற்றியது. விஜய்யுடனும் 'பைரவா' படத்தில் ஜோடி சேர்ந்தவர், சூர்யாவுடனும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். பள்ளியில் படித்த காலத்திலேயே சூர்யாவின் ரசிகையாக இருந்தேன் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இப்போது கீர்த்தி சுரேஷ் வழியிலேயே சூர்யாவுடைய ரசிகையாக இருந்த சாய் பல்லவி, அடுத்து அவருடன் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கீர்த்தி சுரேஷ் போலவே தமிழில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாகவே தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் ஒரு படம் என ஒப்பந்தம் ஆகிவிட்டார் சாய் பல்லவி. அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'கரு' படம் அடுத்த மாதம்தான் வெளிவர உள்ளது.