ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெங்களூருவைச் சேர்ந்தவர் மனீஷா யாதவ். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பொட்டு படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாட்டுக்கு நடனம் ஆடினார். தற்போது திருமணமாகி செட்டிலாவிட்ட மனீஷா, தனக்கு முக்கிய கேரக்டர் என்று சொல்லி ஒரு பாட்டுக்கு ஆட வைத்து விட்டார் வெங்கட்பிரபு என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :
சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பனசுந்தரி பாடல் தான் கதையின் முக்கிய திருப்பம். பாடலை தொடர்ந்து சில காட்சிகளும் இருக்கும். அதுவும் முக்கியமானது என்றார். அதை நம்பித்தான் அந்த பாட்டுக்கு ஆடினேன், நடித்தேன். ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் அது வெறும் குத்துப்பாட்டு என்று தெரிந்தது. வெறும் கவர்ச்சிக்காகவே அந்த பாடல் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. குத்துப்பாட்டு என்று சொல்லியிருந்தால் ஆடியிருக்கவே மாட்டேன். பாட்டுக்கு பிறகு என்னை சொப்பன சுந்தரி என்று அழைக்கிறார்கள் அதுவும் பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.