ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்துள்ள களவாடிய பொழுதுகள் படம், தற்போது வெளிவந்துள்ளது. காதல் மன்னன், ரோஜாவனம், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, தமிழ், ஜே ஜே, ஆட்டோகிராப், ஐயா உள்ளிட்ட பல படங்ளில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பரத்வாஜ் ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
அதற்காக அவர் சும்மா இருந்து விடவில்லை. 1330 திருக்குறளுக்கும் இசையமைக்கும் வேலையை செய்து வருகிறார் 1000-க்கும் மேற்பட்டவர்களது குரலில் இது உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இதை வருகிற ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பரத்வாஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி உலகம் முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஞாபகம் வருதே : பரத்வாஜ் 25 என்ற தலைப்பில் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். உலகின் முக்கிய நாடுகளில் தான் இசை அமைத்த பாடல்களை மக்கள் முன் பாட இருக்கிறார். பரத்வாஜ் ஒரு இசைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.