ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான சன்னி லியோனுக்கு தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய அவர், தெலுங்கில் கருட வேகா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதையடுத்து தற்போது தமிழ், தெலுங்கில் வடிவுடையான் இயக்கத்தில் தயாராகும் ஒரு சரித்திர படத்தில் நாயகியாக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் சன்னிலியோன். இந்த படத்தின் டைட்டில் டிசம்பர் 27-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
2018 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியொன்று பெங்களூரில் பிரமாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் சன்னிலியோன் நடனமாடயிருந்தார். ஆனால், அவரது கவர்ச்சி நடனத்திற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து கர்நாடக அரசு அதற்கு தடை விதித்து விட்டது. இருப்பினும் அதையடுத்து உடனடியாக லண்டனில் கிறிஸ்துமஸ்க்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட கமிட்டாகி விட்டார் சன்னிலியோன். அந்த நிகழ்ச்சிக்காக சில தினங்களுக்கு முன்பே அவர் லண்டன் பறந்து விட்டார்.