ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாடகராக இருந்த மாணிக்க விநாயகம், திருடா திருடி படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு கிரி, கம்பீரம், பேரழகன், கள்வனின் காதலி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், வேட்டைக்காரன் படங்களில் நடித்தார். யுத்தம் செய் அவர் கடைசியாக நடித்த படம்.
7 வருடங்களுக்கு பிறகு தற்போது சென்னை பக்கத்துல என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஏழை விசாயியாக நடிக்கிறார். இது புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம். டி.சி.பி பிலிம்ஸ் சார்பில் தெய்வானி தயாரிக்கிறார். வேலன் இயக்குகிறார். சீனு, கமலி, அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே சுந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜித்தன் கே. ரோஷன் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் வேலன் கூறியதாவது:
இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலை தலங்களில் காதல் மிகவும் கேவலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி காதல் அழிந்து கொண்டிருக்கு இந்த நேரத்தில் இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். அனைத்து இளைஞர்களுக்கும் இந்த படம் பிடிக்கும். தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்கவிநாயகம் வாழ்ந்து இருக்கிறார் என்றார் இயக்குனர் வேலன்.