ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் நீயா என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது அதேப்போன்று பாம்பை அடிப்படையாக கொண்டு பேண்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார் சுரேஷ். விமல் இயக்கிய எத்தன் படத்தை இயக்கியவர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருடன் கேத்ரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
"இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த நீயா படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. 3 மெயின் ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" என்கிறார் இயக்குனர் சுரேஷ்.