ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'என்ன தான் வெற்றிப் படங்களில் நடித்தாலும், முன்னணி வரிசைக்கு நம்மால் வர முடியவில்லையே' என, புலம்புகிறார், ரம்யா நம்பீசன். இவர் நடித்த குள்ளநரிக் கூட்டம், சேதுபதி போன்ற படங்கள் வெற்றி பெற்றதுடன், இவரதுநடிப்புக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தவை. ஆனாலும், முதல் வரிசை ஹீரோயினாக இவரால் உருவெடுக்க முடியாமல், நிரந்தரமான இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடுகிறார். 'குடும்ப பாங்கான தோற்றம், சொந்த குரலில் பாடும் திறமை ஆகியவை இருந்தும், ரம்யாவுக்கென தமிழில் ஒரு தனி இடம் இல்லாதது, வருத்தமான விஷயம் தான்' என்கின்றனர், இவரது ரசிகர்கள். ரம்யாவோ, 'சிபிராஜுடன், சத்யா என்ற படத்தில்
நடித்துள்ளேன். நல்ல கதையம்சம் உள்ள படம்; நிச்சயம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்' என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.