சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ஆத்தா உன் கோயிலிலே படத்தில் அறிமுகமானவர் நடிகர் செல்வா. டாக்டர் ராஜசேகரின் தம்பியான இவர் அதன்பிறகு பல படங்களில் நாயக னாக நடித்தார். ஒருகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விடவே சில படங்களில் கேரக்டர் நடிகராக உருவெடுத்தார். அதோடு கோல்மால் என்ற படத்தை இயக்கி நடித்தவர், தற்போது ரஜினிகாந்தின் பிறந்த நாளான 12-12-1950 என்ற தேதியை தலைப்பாக வைத்து ஒரு படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதோடு தனது பெயரையும் கபாலி செல்வா என்று அவர் மாற்றியிருக்கிறார்.
இந்த 12-12-1950 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.,02) சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் கபாலி செல்வா பேசுகையில், நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன். அந்த வகையில் இப்போதுவரை, அதாவது 40 வருடங்களாக அவரது ரசிகராக இருக்கிறேன். ஆனால் நான் இதுவரை ஒரு படத்தில்கூட அவருடன் நடித்ததில்லை.
மேலும், ஒருமுறை நான் சென்னை காசினோ தியேட்டர் பக்கமாக காரில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் ரஜினி பட போஸ்டரை கிழித்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கி அவரிடம் சண்டை செய்தேன். அது பிரச்சினையானது. அந்த அளவுக்கு ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறேன். அந்த உண்மை சம்பவத்தை தழுவித்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன். அதை நானே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளேன். 75 சதவிகிதம் காமெடி கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. என்னுடன் தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ்திலக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், தமிழக ரசிகர்களெல்லாம் கொண்டாடி மகிழும் ரஜினியின் பிறந்த நாளான 12-12-1950 என்பதே இந்த படத்தின் தலைப்பாகியிருப்பதால், இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு ரஜினியை சந்தித்து படம் பார்க்க அழைக்கயிருக்கிறேன். அதோடு, பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. பின்னர் ஏனோ வேறு நடிகரை நடிக்க வைத்து விட்டனர். ஆனால் எதிர்காலத்தில் ரஜினி படத்தில் ஏதாவது ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறேன் என்றார் கபாலி செல்வா.