ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கலர்ஸ் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.மோகன். இப்போது அந்த குறும்படத்தையே பஞ்சு மிட்டாய் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இதனை எஸ்.கணேஷ் தயாரிக்கிறார். மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், செண்ட்ராயன், பாண்டியராஜன், தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். மாதேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை பாகுபலிக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த வி.ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் உருவாக்கி வருகிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:
இது பேண்டசி கலந்த யதார்த்த படம். புரோட்டா மாஸ்டர் மா.கா.பா ஆனந்த், அவரது மனைவி நிகிலா விமல், அவரது நண்பர் செண்ட்ராயன் ஆகியோருக்கு இடையிலான கதை. அவர்கள் நிஜவாழ்க்கையில் எளிமையானவர்கள். ஆனால் அவர்களின் கனவுலக வாழ்க்கை சுவாரஸ்யமானது. அந்த கனவுலக வாழ்க்கையை கிராபிக்ஸ் உதவி கொண்டு வடிவமைத்து வருகிறோம். பாகுபலி கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் கடந்த ஒரு வருடமாக இதனை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் பாதி கிராபிக்ஸ் பணிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். என்றார் மோகன்.