ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சசிகுமார் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான படம் 'கொடிவீரன். சசிகுமார் உடன், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தை முதலில் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் கொடிவீரன் படத்தின் ரிலீஸை இம்மாதம் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். இந்நிலையில் தாரை தப்பட்டை படத்துக்கு வாங்கிய கடன் பாக்கியை செட்டில் பண்ணவில்லை என்றால் கொடி வீரன் படத்தை மதுரை ஏரியாவில் வெளியிட முடியாதபடி ரெட்கார்டு போடப்பட்டது. இந்தப் பிரச்சனை காரணமாக கொடிவீரன் படத்தின் இணைத் தயாரிப்பாளாரும், சசிகுமாரின் உறவினருமான அசோக் குமார் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையால் 'கொடி வீரன்' படத்தின் ரீலீஸை மீண்டும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொடிவீரன்' படம் டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதற்குள் மதுரை ஏரியா பிரச்சனையை சரி பண்ண திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை முடியவில்லை என்றால் மதுரை ஏரியாவை தவிர்த்து மற்ற ஏரியாக்களில் கொடிவீரன் படத்தை ரிலீஸ் பண்ணும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.
டிசம்பர் 8-ஆம் தேதி அன்று சிபி சத்யராஜின் 'சத்யா', கிருஷ்ணா நடித்துள்ள 'வீரா', நிவின் பாலி நடித்த 'ரிச்சி ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள் ஜெயிக்குமோ?