ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் மேலாளரும், இணை தயாரிப்பாளரும், நெருங்கிய உறவினருமாக அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மதுரை பைனான்சியர் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் சசிகுமார் அன்புசெழியன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்பு செழியன் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் சசிகுமார் நேற்று மாலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரனை சுமார் 2 மணிநேரம் நடந்தது. சசிகுமாருடன் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரும் வந்தனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகுமார், "என் வளர்ச்சிக்கு காரணமே அசோக்குமார் தான். அவன் மறைவில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. போலீஸ் விசாரணையில் எனக்கு தெரிந்த தகவல்களை சொன்னேன். அன்புசெழியனுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள்" என்றார்.