விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
மதுரை:கந்துவட்டி பிரச்னை அனைவரையும் பாதித்துள்ளது என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறினார்.
கடன் பிரச்னையால் தயாரிப்பளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்து வட்டி கேட்டு அன்பு செழியன் என்பவர் மிரட்டியதால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். அசோக்குமார் உடல் இன்று மதுரை வந்தது. உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் மரணம் தான் கடைசி மரணமாக இருக்க வேண்டும். இது புரட்சிக்கான மரணமாகவே கருதுகிறேன். கந்து வட்டி பிரச்னையால் நான், கவுதம் மேனன், பார்த்திபன் என எல்லோரும் சிக்கியுள்ளோம். அன்புசெழியன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பு செழியனுக்கு ஆதரவாக அமைச்சர் , எம்.எல்.ஏ. யார் வந்தாலும் விடமாட்டோம். இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது.நடக்கவும் விட மாட்டோம். இவ்வாறு விஷால் கூறினார்