ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமாக கம்பெனி புரொடக்ஷ்ன் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார், சசிகுமாரின் அத்தை மகன். 45 வயதான அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்தார். தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருக்கிறார் அசோக் குமார். இது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கு பதிவு
அசோக் குமார் தற்கொலையால், சசிகுமார் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கடன் கேட்டு மிரட்டல், தற்கொலைக்ககு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேதனை தருகிறது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், தனது மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்றார்.
சினிமாவை விட்டு வெளியேறும் நிலை
தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், சினிமாவில் தான் எல்லோரும் வீர வசனம் பேசுகின்றனர். பிரச்னை குறித்து யார் வெளியே சொல்கிறார்கள். அனைத்து சங்கமும் ஒன்று சேர்ந்து கந்து வட்டியை வசூலிக்கும் பிரச்னைக்கு முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் சினிமாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். சினிமா தயாரிப்பாளர் சங்கமும், வினியோகஸ்தர் சங்கமும் பேசி முடிவுஎடுக்க வேண்டும் என கூறினார்.
அன்புச்செழியன் தலைமறைவு
தன் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பைனான்சியர் அன்புச் செழியன் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அசோக்குமாரின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புக்களை ஆய்வு செய்யவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.